முறம் (அல்லது சுளகு, சொலவு) என்பது தானியங்களை உமி, கல் , குச்சி போன்ற பொருட்களை பிரித்தெடுக்க உதவும் ஒரு கருவியாகும். தமிழக கிராமப்புரங்கள் மட்டும் அல்லாமல், நகரங்களிலும் இப்பொழுது இந்த முரதினை பயன்படுத்துகிறார்கள். சென்ற வாரம் தியாகராய நகரில் உள்ள சரவணா கடையில் பிளாஸ்டிக் முறத்தினை பார்த்தேன். என்னதான் அழகான வண்ணங்களில் இருந்தாலும், நிஜ முறம் போன்று இல்லை.
முறத்தின் பயன்பாடுகள்
- சிறு சிறு கற்களை நீக்க
- சிறு சிறு தூசிகளை நீக்க
- கருவாடு காயவைக்க
- வடகம் காயவைக்க
- கீரை இலைகளை ஆயும்போது
- தானியங்களை காயவைக்க
- அறுவடையின்போது தூசிகளை விரட்டியடிக்க
- பலகாரங்களை அடுக்கி வைக்க
வேலை இல்லாத நேரங்களில் ஆணிகளில் உஞ்சலடுவதும் ….
Filed under: Chennai | சென்னை, Family | குடும்பம், Food உணவு | Hotel விடுதி, Gardening | தோட்டக்கலை | Tagged: சுளகு, சொலவு, முறம் | Leave a comment »